1.
விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன - என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும்
பேசுக.
Share
1.
விளைநிலங்கள் கட்டடங்களாகின்றன - என்னும் தலைப்பில் ஒட்டியும் வெட்டியும்
பேசுக.
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
ஏழை விவசாயி : எங்க அப்பா காலத்திலிருந்து நெல் கரும்பு போட்டோம். அப்ப வந்தது. இப்ப……. வெண்டை , புடலை கூட வரமாட்டேங்குது.
அழகு : என்ன போட்டு என்ன ஆச்சு? மழையில்லானா என்ன பண்ண முடியும்? (மனை விற்பனையாளர்)
ஏழை விவசாயி : அழகு…. பக்கத்திலிருக்கிற வயலெல்லாம் பிளாட் போட்டுட்டாங்க.
எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல்லே! மழையும் இல்ல, கிணத்துல
தண்ணியில்லே!
அழகு : நான் சொல்ற வழிக்கு வரமாட்டங்கிற… வித்து பணத்த பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா சாப்பிட்டுட்டு தூங்கு.
ஏழை விவசாயி : பூமித்தாய விக்கச் சொல்ற… வித்தா அப்பார்ட் மெண்ட் கட்றங்கிறீங்க.. என்ன ஆகப் போதுன்னு எனக்குத் தெரியல!
அழகு : மழையில்ல தண்ணியில் வீடு கட்டி நூறு ஜனங்க பொழக்கட்டுமே! வயல் வரப்ப வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க? வித்தா மகளுக்கு கல்யாணம்; மகனைப் படிக்க வைக்க…. எல்லாம் உன் நன்மைக்கே சொல்றேன்.
ஏழை விவசாயி : பால் தர்ற பசுமாட்ட மடி அறுத்துப் பால் குடிக்கிறதா? விளை நிலத்தைப் பூரா விலை நிலமா ஆக்கிட்டீங்க அழகு.
அழகு : இனி வரப்போற நாளில் வீடுதான் முக்கியம். குடியிருக்க வேண்டாமா?
ஏழை விவசாயி : உங்க மாதிரி ஆளுகளால தான் கொசு தொந்தரவு நிறைய ஆகிருச்சு. குளங்குட்டையெல்லா பிரிச்சுப் போட்டு வித்தாச்சு தவளை இருந்தா கொசுவப் பிடிக்கும் இப்ப அதுக்கும் வழியில்ல
அழகு : ஒன்னும் வேணாங்க உங்க புள்ளங்க இந்தக் குடிசையில் இருக்குமா?
கேட்டுச் சொல்லுங்க….
ஏழை விவசாயி : உனக்குப் பணம் முக்கியம் எனக்குப் பயிர் முக்கியம். நிலத்தால் சோறு போடுறவன் ஏழையாகிறான். நிலத்தைக் கூறுபோடுறவன் பணக்காரனாகிறான்.