திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD) பற்றி சிறுகுறிப்பு தருக.
Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Answer:
Death) என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். முதுமையடைதல், வேட்டையாடப்படுதல், ஊட்டக்குறை, நோய், தற்கொலை, கொலை, போர், பட்டினி, நீர்ப்போக்கு, பேரதிர்ச்சிகள் மற்றும் விபத்துக்கள் உள்ளிட்டவை பொதுவாக இறப்பு என்ற நிகழ்வுக்கு காரணங்களாகின்றன[1].
இறப்புக்குப் பின்னர் உயிரினங்களின் உடல் சிதைவடையத் தொடங்குகிறது. இறப்பு - குறிப்பாக மனிதர்களின் இறப்பு - பொதுவாக சோகமான அல்லது விரும்பத்தகாத நிகழ்வாகக் கருதப்படுகிறது, இறந்திருப்பவருடனான பாசம் மற்றும் இறந்தவருடன் சமூக மற்றும் குடும்ப உறவுகளை தொடர முடியாமை போன்ற இழப்புகள் இதற்குக் காரணமாக அமைகின்றன. இதைத்தவிர மரணபயம் (Death Anxiety), மரணம் தொடர்பான பயம் (Necrophobia), பதகளிப்பு, துயரம், துக்கம் (Grief), மனவலி உணர்வு (Emotional Pain), மனத்தளர்ச்சி, மன அழுத்தம், பரிவு, இரக்கம் (Compassion), தனிமை (Solitude) போன்ற இயல்பற்ற நிகழ்வுகளும் இறந்தவருடன் தொடர்புடையவர்களுக்கு ஏற்படுகின்றன.
பல மதங்களும், அவை சார்ந்த மெய்யியலும்; உயிரும், உடலும் வெவ்வேறானவை என்றும் வாழும் உயிரினத்தின் உடலுக்குள் இருக்கும் உயிர் உடலைவிட்டு நீங்கும் போது இறப்பு ஏற்படுவதாகவும் கூறுகின்றன. இறப்பின் போது உடலைவிட்டு நீங்கும் உயிர்கள் மீண்டும் இன்னொரு உடலுடன் பிறப்பதாகச் சில மதங்கள் நம்புகின்றன. இது மறுபிறப்பு எனப்படுகின்றது.
திட்டமிடப்பட்ட செல் இறப்பு (PCD)